Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹக்கலையில் தொடரும் விபத்துகள்

#ஹக்கலை #விபத்து #ஹக்கலைவிபத்து #வீதிவிபத்து #விபத்துகள் #இலங்கைசெய்தி #இலங்கைவிபத்து #BreakingNews #SriLankaNews #AccidentNews #LatestNews #NewsUpdate

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகிலுள்ள அபாயகரமான வளைவில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், வீதியை அகலப்படுத்தி புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற மூன்று விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். டிட்வா சூறாவளியால் ஹக்கல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவுகளினால் வீதி சேதமடைந்து தாழிறங்கியுள்ள நிலையில், குறுகிய வீதி காரணமாக தொடர்ந்து விபத்துகள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

முதலாவது விபத்தில், நுவரெலியாவில் இருந்து வெலிமடை நோக்கி அதிக சுமையுடன் பயணித்த கனரக வாகனத்தின் தடையாழி செயலிழந்ததால், நான்கு வாகனங்கள் சேதமடைந்தன. எனினும், வாகனங்களில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இரண்டாவது விபத்தில், ஹக்கல தாவரவியல் பூங்கா அருகே வீதியோரமாக நடந்து சென்ற 46 வயதுடைய ஒருவர் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார். அதே பகுதியில் நேற்று (02) மாலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் காரும் மோதி மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் மக்கள், சிலர் உடல் அவயங்களையும் இழந்துள்ளதாகக் கூறுகின்றனர். வீதி மிகவும் குறுகியதாக இருப்பதால் எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கு இடமளிப்பதிலும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மண்சரிவால் சேதமடைந்து தாழிறங்கிய பகுதிகளை புனரமைப்பதுடன், வீதியை அகலப்படுத்தி பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பேராதனையில் புதையல் தோண்ட முயன்ற இருவர் கைது

ஆவணி 28, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை மண்ணில் இந்திய வீரர் தேவ்தட் படிக்கல் முதலாவது சதத்தை பதிவு செய்தார்

ஆவணி 15, 2026
இலங்கை

பொலிஸார் இருவர் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் அடையாளந் தெரியாத சடலங்களினால் பரபரப்பு

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube