பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் பல முக்கிய தகவல்களைப் பொரலஸ்கமுவ பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
‘கொஸ்மல்லி’ என்பவரின் காசாளரைக் குறிவைத்தே பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கருதப்படும் ‘தெஹிவளை சண்டோ’ என்பவரால் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், துப்பாக்கிதாரிகளின் இலக்கு தவறியதில் காசாளரின் தந்தையே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயதுடைய முதியவராவார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளே கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி இத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகப் பொரலஸ்கமுவ பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
