Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 25-35 ஆக திருத்துமாறு கோரிக்கை

புரட்டாதி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

குறித்த சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த வயது எல்லையை 25 – 35 வயதுக்கு இடைப்பட்டதாகத் திருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே முன்னதாக குறிப்பிட்டுகையில், முச்சக்கர வண்டி செலுத்துவது தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தலைச் செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, முச்சக்கர வண்டியை செலுத்தக் குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் காப்புறுதிகள் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் நகரில் திறக்கப்படவுள்ள புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

வைகாசி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பொலிஸார் பலி!

வைகாசி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்மலானையில் வீட்டுத் தொகுதியில் தீ விபத்து

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube