இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி புதுடெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்தப்போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கப் போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
15 வயதே ஆன இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறும் பட்சத்தில், சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் விளையாடும் மிக இளம் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.
அபிஷேக் சர்மாவுடன் முன்னணி வீரர் சஞ்சு சாம்சன் களமிறங்குவாரா அல்லது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பதில் அணி நிர்வாகத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.
எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு இது மிக முக்கிய சர்வதேச தொடராகப் பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரண்டு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
