நாடு முழுவதும் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் நோக்கில், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இரத்தினபுரியில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
சபரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டவிரோத மதுபான ஒழிப்பு நடவடிக்கைகள், அதில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான சட்டங்களில் திருத்தம், இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மேலதிக பொலிஸ் அதிகாரிகளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இவை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
