திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சிறிய குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வற்றியுள்ள நிலையில், தண்ணீர் தேடி காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அண்மையில் வரத் தொடங்கியுள்ளன.
கந்தளாய் பிரதேசத்தின் ஜயந்திபுரம் மற்றும் சூரியபுரம் பகுதிகளில் அண்மைய நாட்களாக யானைக் கூட்டங்கள் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கந்தளாய் – சேருவில பிரதான வீதியின் சித்தாறு பகுதியில் இலட்சக்கணக்கான பறவைகள் திரண்டுள்ளமை இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாவட்டத்தில் நீடித்து வரும் வறட்சியால் நீர்நிலைகள் வற்றிவருவதால், வனவிலங்குகளும் பறவைகளும் நீர் மற்றும் உணவு தேடி இடம்பெயர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.
