தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் கட்டமைப்பு பரிமாற்றத்துடன் ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, கஹதுடுவையில் அமைக்கப்படவுள்ள கட்டமைப்பு பரிமாற்றம் உட்பட, ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவை முதல் இங்கிரிய வரையிலான முதற்கட்ட வீதிப் பிரிவை நிர்மாணிப்பதற்கான கொள்முதல் நடைமுறைகளை 2026 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்து, உரிய ஒப்பந்தங்களை வழங்குவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ், உள்நாட்டு நிதியளிப்பில் தோராயமாக 15 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் இந்தக் கொள்முதல் நடைமுறையைச் செயல்படுத்தி, தகுதியான ஒப்பந்தக்காரரைத் தேர்ந்தெடுப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு இவ்வாறு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் மொத்தம் மூன்று கட்டங்களைக் கொண்டது:
கட்டம் 01: கஹதுடுவை – இங்கிரிய
கட்டம் 02: இங்கிரிய – இரத்தினபுரி
கட்டம் 03: இரத்தினபுரி – பெல்மடுல்ல
