வவுனியா, A9 வீதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் இருந்து A9 வீதி ஊடாக சென்ற மோட்டர் சைக்கிள் தாண்டிக்குளம், முருகன் கோவிலடியை அண்மித்த போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அதில் பயணித்த இரு இளைஞர்களும் மோட்டர் சைக்கிளில் இருந்து நிலத்தில் வீழ்ந்து தப்பியுள்ளனர்.
இதன்போது, அந்தப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
