Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதம நீதியரசர் பீர்த்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு – உதய கம்மன்பில

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. தனிநபர் ஒருவரை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பை திருத்தம் செய்வது தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (29) நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்காகவே சகல நீதிபதிகளின் பதவிக் காலத்தையும் நீட்டிப்பதற்கு அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது. இது முற்றிலும் தவறானது.

அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் முயற்சியால் நீதித்துறைக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படும் என்று நீதியமைச்சர் வினவுவது ஆச்சரியமாகவுள்ளது.

பிரதம நீதியரசர் பீர்த்தி பத்மன் சூரசேனவை பதவியில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை தற்போது எடுத்துள்ளது.

நிறைவேற்றுத்துறையின் தீர்மானத்துக்கு அமைவாகவே நீதிபதிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்படவுள்ளது. இது தவறானதொரு எடுத்துக்காட்டாகும். விரும்பியோ அல்லது விரும்பாமலோ நீதித்துறை நிறைவேற்றுத்துறையின் விருப்பத்துக்கு அமைய செயற்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்படும் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா பேரிடர் – மாணவர்களுக்கான விசேட நிதியுதவி: 99.88% கொடுப்பனவுகள் வழங்கி முடிப்பு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பு!

வைகாசி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

14 ஆண்டுகள் கழித்து பழிவாங்கிய யானை

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: சுமந்திரன் வாதம்! விசாரணை செப்டம்பர் 7ஆம் திகதி

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube