2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், பாடவிதான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் அனைத்தும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் அல்லது விநியோகித்தல் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், பரீட்சை வினாக்கள் அல்லது அதற்கு ஒத்த வினாக்கள் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தும் சுவரொட்டிகள், பதாகைகள், கைப்பிரதிகள் உள்ளிட்ட விளம்பரங்களையும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
