நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், சில வார இடைவெளியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய சிறைச்சாலை மோதல் இதுவென குறிப்பிட்டுள்ளார்.
இவை தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல எனவும், மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் சீரழிந்து வரும் சிறைச்சாலை கட்டமைப்பின் வெளிப்பாடு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
சிறைச்சாலைத் துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், நிரந்தர சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவர் இதுவரை நியமிக்கப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிக கைதிகள், போதிய வசதியின்மை, சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் குறைபாடுகள் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
