வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா இன்று (03) கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமானது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்துள்ள இவ்வாலயத்தில், மூலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான விசேட பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, எம்பெருமான் வசந்த மண்டபத்திலிருந்து கொடிமரத்திற்கு எழுந்தருளினார்.
சிவாச்சாரியர்களால் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்து, மங்கள வாத்தியங்கள், வேத மற்றும் தேவாரப் பாராயணங்கள் மத்தியில் பக்தர்களின் “அரோகரா” முழக்கத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இவ்வாண்டுக்கான தீர்த்த உற்சவம் ஆடி அமாவாசை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

