அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, பூஜாபிட்டிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ள பல பகுதிகளுக்கு இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மெதவெல பழைய சேவை நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள கெவும்கோஹேபாரா, கோனிகொட, ஜயந்திபாரா, குருக்கேவே, தல்கும்புர, இடமேகம, அரம்பேகம, கொரொக்கசங்கபாரா, எலமல்பத்த, கொட்டுதென்ன, பெத்தியகொடவத்த, கலுவன, போத்தட்ட, ஹரங்கஹதென்ன, டொடம்தென்ன, கும்புரகெதர, தெம்பரலோவ, திப்புத்த மற்றும் தலப்பேலல்கொட ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்படும்.
அத்துடன், மெதவெல புதிய சேவை நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள பதுகொட, தித்தெனிய, ஒவிஸ்ஸ, வதகொட, தொம்பகம்மன, ஹதெனிய, சூரியகும்புர, அம்பருப்ப, ஹரன்காவ, பொக்காவல மற்றும் வளதென்ன பகுதிகளிலும் குறித்த நேரத்தில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
