யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சிம் அட்டை தொடர்பான பிரச்சினையொன்றை தொடர்ந்து 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி சிம் அட்டை ஒன்றை பெற்றுத் தருமாறு அவர் கோரிய நிலையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, குறித்த இளைஞன் தன்னைத்தானே தீக்கிரையாக்கிக் கொண்டு பின்னர் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
