கொழும்புக்கும் குவைத்துக்கும் இடையிலான வழக்கமான பயணிகள் விமான சேவையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 8, 2026 முதல் வாரத்திற்கு ஆறு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
UL229 என்ற விமானம் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு இரவு 8.05 மணிக்கு குவைத்தை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் UL230 விமானம் அதே நாட்களில் இரவு 9.10 மணிக்கு குவைத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
இதன்மூலம் புதன்கிழமையைத் தவிர வாரத்தின் ஏனைய ஆறு நாட்களிலும் கொழும்பு–குவைத் இடையே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வழக்கமான பயணிகள் விமான சேவையை முன்னெடுக்கவுள்ளது.
