தொல்பொருள் புதையல்களைத் தோண்டி எடுக்கும் நோக்கில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 42 வயதுடைய நபர் ஒருவர் தமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று நேற்று (09) இரவு மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பக்பிட்டியாவ பகுதியில் இந்த சட்டவிரோத புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
