போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் அதிநவீன நடமாடும் ஆய்வுகூட வாகனமொன்று இன்று (10) போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு (NTMI) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைத் திட்டத்திற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் அதிநவீன நடமாடும் ஆய்வுகூட வாகனமொன்று இன்று (10) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம், போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திடம் (NTMI) கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் ஆய்வுகூடத்தின் மூலம், தேவையான இடங்களுக்குச் சென்று போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய போக்குவரத்து குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
