ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை, சாட்டி கடற்பகுதியில் நீராடச் சென்ற 52 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
