Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வறட்சியான வானிலையால் 84,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

#வறட்சியானவானிலை #வறட்சி #வறட்சிபாதிப்பு #84000பேர் #மக்கள்பாதிப்பு #வானிலைநிலைவரம் #இலங்கை #வானிலைஎச்சரிக்கை #Drought #DroughtImpact #SriLankaWeather #SriLankaNews #WeatherUpdate #ClimateChange

ஆவணி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தற்போது நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 84,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 மாவட்டங்களைச் சேர்ந்த 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 நபர்கள் இந்த வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 5 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 நபர்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என கடமையிலுள்ள வானிலை அதிகாரி மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அந்த நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வினாடிக்கு 20 கனமீட்டர் நீர் குடா கங்கைக்கு திறந்து விடப்படுவதாக குக்குலே கங்கை நீர்மின் உற்பத்தி நிலைய நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் வருண ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பதிவு!

ஆடி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்குடாவில் நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

குடா ஓயாவின் நீர்மட்டம் உயர்வு!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube