இந்த ஆண்டின் முக்கிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான பகுதி சந்திர கிரகணம், இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிகழவுள்ளது.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் அமையாத நிலையில், சந்திரன் பூமியின் நிழல் பகுதிக்குள் செல்வதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. இதன்போது சந்திரனின் பெரும்பகுதி சிவந்த தாமிர நிறத்தில் காட்சியளிக்கும்.
சர்வதேச நேரப்படி அதிகாலை 2.33 மணிக்கு கிரகணம் ஆரம்பமாகி, 4.12 மணியளவில் உச்சத்தை அடையும். உச்சகட்டத்தில் சந்திரனின் சுமார் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்படும்.
மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இந்த நிகழ்வை தெளிவாகக் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் இதனை நேரடியாகக் காணும் வாய்ப்பு இல்லை.
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பாதுகாப்பாகப் பார்வையிட முடியும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
