Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதி வியாபாரி ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

Wellawatte | selling | Trader | 5Lakhe | Fined | SriLanka | QuickTamilNews

வைகாசி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி நிலையத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று (05) செவ்வாய்க்கிழமை 05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அறிவிப்பின் படி, ஒரு கிலோகிராம் உள்ளூர் நாடு அரிசியின் நிர்ணயிக்கப்பட்ட விலை 230 ரூபாவாகும். இருப்பினும், குறித்த விற்பனை நிலையம் அதனை 320 ரூபாவிற்கு விற்பனை செய்து, ஒரு கிலோவிற்கு 90 ரூபாய் மேலதிகமாக அறவிட்டுள்ளமை சோதனையின் போது கண்டறியப்பட்டது.

அரிசி விலையை அதிகரித்து நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இந்த சம்பவம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்க்குமாறும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக ஒருபோதும் செலுத்த வேண்டாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

விலை மோசடி தொடர்பான முறைப்பாடுகளை சமர்ப்பிக்க விரும்புவோர், 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகார சபையின் அவசர இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரண வாக்குமூலம்: முறையான விசாரணை கோருகிறார் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்!

வைகாசி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உள்நாட்டு வர்த்தகர்கள் வெளிநாடு செல்லும் சூழல் உருவாகியுள்ளது – புஷ்பகுமார கருணாரத்ன!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹோல்புறூக் கோட்டம் 03 இன் கீழ் இயங்கும் பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!

வைகாசி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube