அநுராதபுரம், சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ரம்பாவ, பண்டுகாம்பயபுரப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று குழந்தைகளின் தந்தையான ரத்நாயக்க பண்டார என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நேற்று (01) காலை தனது மகளை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்தக் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை அநுராதபுர தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அநுராதபுர தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
