நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு குறைந்ததையடுத்து, மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது போதுமான அளவு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவதால், மின் விநியோகத்திற்கு எந்தவித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.
மின்னுற்பத்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் கையிருப்பில் உள்ள நிலக்கரியின் அளவு குறைவடைந்துள்ளது. நிலக்கரி கப்பல் எதிர்வரும்12 ஆம் திகதி நாட்டை வந்தடையும். அக்கப்பல்களில் இருந்து நிலக்கரியை இறக்கிய பின்னர் வழமை போல் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் என்பதால், மின்தடை ஏற்படுமோ என தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு குறைந்ததையடுத்து, மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில் போதுமான அளவு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவதால் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித தீர்மானமும் அரசாங்கம் எடுக்கவில்லை. தற்போதைய வறட்சியான காலநிலையால் பிரதான நீர் நிலைகளின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து செல்கிறது. ஆகவே குடிநீர், மின்னுற்பத்தி, விவசாயம் ஆகிய சகல தேவைகளுக்கும் நீரை விநியோகிக்க வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.
நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் நிலக்கரி ஊடாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய நேரிடும். ஆகவே தற்போதைய நிலைமை தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும். நீரையும், மின்சாரத்தையும் இயலுமான வகையில் சிக்கனமாக பாவிக்க வேண்டும் என்றார்.
