Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்!

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பாராளுமன்றத்தில் இன்று (08) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாணத்தில் நிலவும் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

வடக்கு மாகாணத்தில் அதிகளவான தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுதாலும், ஆசிரியர்களுக்குரிய முழுமையான பயிற்சிகள் வழங்கப்படாமையினாலும், பாடசாலைகளில் காணப்படுகின்ற பழுதடைந்த இலத்திரனியல் சாதனங்களை துரிதகதியில் திருத்துவதில் இடர்நிலைகள் காணப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களின் பற்றாக்குறையைச் சீர்செய்வதோடு ஆசிரியர்களுக்குரிய முழுமையான பயிற்சிகளை வழங்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்வி அமைச்சரான பிரதமரிடம் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய,பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எழுப்பிய கேள்வி மிகவும் பொருத்தமானது. இலத்திரனியல் சாதனங்களைத் திருத்துவதற்கு எமக்கு ஆசிரியர்களின் குறைபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது அதற்காக ஆசிரியர்களை பணிக்கமர்த்துவதற்கான வேலைகளை மூன்னெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

அடுத்த வருட ஆரம்பத்தில் ஒரு ஆளணி சேர்ப்புத் திட்டத்தின் ஊடாக இந்தக் குறைபாடு தீர்க்கப்படும்.தற்போது குறித்த ஆளணி சேர்ப்பிற்கான பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த வருடமே அதற்குரிய செயற்பாடுகள் முடிவுறும்.

தற்போது காணப்படுகின்ற அந்த ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறையில், ஐம்பது சதவீதமான ஆளணிப் பற்றாக்குறை இந்த வருடத்திற்குள்ளேயே நிரப்பப்படும்.அதேவேளை அந்த ஆசிரியர்களுக்கான பயிற்சிகளையும் நாங்கள் ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கின்றோம்.மேலும் பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்புவசதிகள், கருவிகள் பழுதுபாரத்தல் போன்ற விடயங்களுக்கான நிதியும் மாகாணசபைகள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகள் கோரினால் மேலதிக நிதியும் ஒதுக்க முடியும் என குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மெட்டாவின் AI தொழில்நுட்ப ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்!

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கைதான ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டத்தின் நூல்கள் சிக்கியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம் !

ஆடி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பொதுச் சுகாதார பரிசோதகர் போல நடித்து கடைகளில் பணம் கோரிய குழு தொடர்பில் புகார்!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube