சர்ச்சைக்குரிய மிக் விமானக் கொள்வனவு தொடர்பான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (10) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக் கொள்வனவு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர விசாரணைகளுக்கு அமைவாக, அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொள்வதற்காகவே முன்னாள் விமானப்படை தளபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
