தனமல்வில- கஹகுருல்லன்பெலெஸ்ஸ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உடவளவ முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, உலர்ந்த கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சோதனையை மேற்கொண்ட அதிரடிப்படையினர், சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 114 கிலோகிராம் 500 கிராம் எடையுடைய உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
தனமல்வில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளில் வருகின்றனர்.
