ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
எதிர்வரும் மே 12ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கடிதம், இன்று (மே 9) மஹிந்த ராஜபக்சவின் கார்ல்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதிப்படுத்தியுள்ளது.
ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விசாரணைகளுடன் தொடர்புடையவராகக் கருதப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன காலமான 24 மணிநேரத்திற்குள் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு மற்றும் காவல்துறையினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
