வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் தங்குமிடங்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக, கட்டிட உரிமையாளர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட குழுக்கள், இவ்வாறான இடங்களை வாடகைக்கு எடுத்து ரகசியமான முறையில் இணையத்தளம் ஊடாக பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 ஆவது பிரிவின் கீழ், தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
