Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டார் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்!

சித்திரை 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஒரு பீப்பாய் டீசல் 286 அமெரிக்க டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக HSBC வங்கியின் உலகளாவிய தலைமை நிர்வாகி ஜோர்ஜ் எல்ஹெடெரி (Georges Elhedery) வெளியிட்ட தகவலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஹொங்கொங்கில் அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜோர்ஜ் எல்ஹெடெரி, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை சாதாரண மட்டத்தில் இருந்தபோதிலும், இலங்கையிலிருந்து ஒரு கொள்வனவாளர் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்காக 286 டொலர் எனும் பாரிய தொகையைச் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஊடக நிறுவனமொன்று லண்டனில் உள்ள HSBC தலைமையகத்தின் ஊடகப் பிரிவிடம் வினவியபோது, ஜோர்ஜ் எல்ஹெடெரி வெளியிட்ட கருத்தை, அதன் சிரேஷ்ட குழு முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், மசகு எண்ணை கொள்வனவில் கூடிய விலையாக 286 டொலர் பெறுமதியானது இலங்கையிலிருந்தே பதிவாகியுள்ளதாக அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்தத் தகவலை ஒப்புக்கொண்டுள்ளமை எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வயோதிபத் தம்பதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காண பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் “நினைவாயுதம்” புகைப்பட கண்காட்சி!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முதல் BESS உபகரணம் கிளிநொச்சி வந்தது!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஆண் ஒருவர்- பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் உயிரிழப்பு!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube