எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நீடித்து வரும் மத்திய கிழக்கு மோதல் நிலைமைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த 2026 மார்ச் மாத நடுப்பகுதியில் எரிபொருள் விநியோகத்திற்கான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
எரிபொருள் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்காகவே இந்த QR முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டது.
எரிபொருள் நுகர்வைக் மேலாண்மை செய்யவும், அதனைக் குறைக்கவும் இந்த முறைமை மேலும் தொடரும் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
