அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், குறித்த கைதி அங்குனகொலபெலஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வியாழக்கிழமை (21) உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த கைதி 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதேவேளை, அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் தங்கியிருக்கும் சிறை அறை ஒன்றில் தற்போது காய்ச்சல் நிலைமையொன்று வேகமாகப் பரவி வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
