இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் தகுதி சுற்றுக்கான நான்கு அணிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, தகுதிச் சுற்றுக்கு இறுதி அணியாக தெரிவானது.
இதற்கமைய, தகுதிச் சுற்றுக்கான முதல் போட்டியில், ரோயல் செலஞ்சஸ் பெங்களுரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இன்று மோதவுள்ளன.
தரம்சாலாவில் நடைபெறவுள்ள இந்த போட்டி, இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி புள்ளிப் பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அதேநேரம், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முறையே, 18 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன், 4ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
