மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி வந்த 60 வயதுடைய தந்தையாரை நேற்று திங்கட்கிழமை (01) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
க.பொ.தர உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்ற தனது மகளிடம் , தந்தை தொடர்ச்சியாக ஆபாசமாக பேசி வந்ததாக பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் மா அதிபருக்கு இணையத்தளம் ஊடாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, மதுபானசாலை விற்பனை நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த 60 வயதுடைய தந்தையாரை நேற்று (01) இரவு பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது, அவர் ஆபாச படங்கள், வீடியோக்களை அதிகமாக தரவிறக்கம் செய்து வைத்திருந்ததாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
