யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று (05) இரவு இடம்பெற்ற டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் கடுமையாகக் காயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் புத்தூர் வீதியில் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
