Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முற்றாகத் தடை!

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட பல முக்கிய பிரதேசங்களில் நாளை (ஜூன் 16) இரவு முதல் 19 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் முற்றாகத் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தனகல்ல மற்றும் கரஸ்நாகல ஆகிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 16 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8.00 மணி முதல் மறுநாள் 17 ஆம் திகதி (புதன்கிழமை) பிற்பகல் 3.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் சபையின் அறிவிப்பின்படி பின்வரும் பகுதிகளிலும், அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

மினுவாங்கொட பகுதி:
 மினுவாங்கொட, அஸ்கிரிய, உடுகம்பொல மற்றும் ஓபாத.
கம்பஹா பகுதி: கம்பஹா மாநகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகள், கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகள், வெலிவேரிய, பலும்மஹர மற்றும் ரதுபஸ்வல.

மஹர பகுதி:
 மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட மாஹரகம, சிந்துரமுல்ல, கிரிகித்த, கினிகம மற்றும் எட்டிகெஹெல்கல்ல.

அத்தனகல்ல ரன்பொகுணுகம வீடமைப்புத் திட்டம், ஊராபொல, அத்தனகல்ல, படலிய மற்றும் வத்துபிட்டிவல.

நிவ்தாவுவ – வேயங்கொட பகுதி:
 நித்தம்புவ, வேயங்கொட, கலைகெடிஹேன, திஹாரிய மற்றும் நைவல.
இந்தத் திடீர் நீர் விநியோகத் தடையினால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீரினை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், நீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது அவசரத் தேவைகளுக்கு 1939 என்ற அவசர உதவி இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவிவரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் 2 வாரங்களுக்கு மூடல்!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மாகாண ஆளுநர் பதவி விலகல்!

ஆடி 15, 2026
இலங்கைவானிலை

நாட்டின் பல பகுதிகளில் மழை

ஆனி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube