இலங்கையில் மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக மூன்று முக்கிய பாதைகள் மின்மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடலோர பாதை கம்பஹா, வெயங்கொட மற்றும் மீரிகம வரை விரிவுபடுத்தப்படவுள்ளதுடன், களனி பள்ளத்தாக்கு பாதை மருதானை முதல் மாகும்புர வரையும், பிரதான பாதை மருதானை முதல் பாணந்துறை வரையும் மின்மயமாக்கப்படவுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரத்திற்குப் பின்னர், மலையக மற்றும் வடக்கு ரயில் பாதைகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் திட்டம் கட்டங்களாக அமல்படுத்தப்படவுள்ளதுடன், முழுமையான புறநகர் மின்சார ரயில் அமைப்பு உருவாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 3 முதல் 4 ஆண்டுகளில் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
