மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன தோட்டப் பகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹப்புகஸ்தென்ன தோட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தெபட்டன் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விஜயகுமார் (37) என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தேயிலை மலைக்கு நடுவே அமைந்துள்ள மின்கம்பத்திற்கு அருகில் சடலம் காணப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
