நாடளாவிய ரீதியில் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தகவல் சேகரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சு புதிய டெங்கு செயற்பாட்டு அறை ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பின் கீழ், டெங்கு பரவல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொதுமக்கள் உடனடியாகத் தெரிவிப்பதற்கும், வழிகாட்டல்களைப் பெறுவதற்கும் 011-7966366 என்ற பிரத்யேக அவசர உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், நோய்க் கட்டுப்பாட்டுப் பணிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
