இந்த ஆண்டின் ஜனவரி 1 முதல் ஜூலை 5 வரை நாட்டில் இடம்பெற்ற 1,355 வீதி விபத்துகளில் 1,424 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் விபத்துகள் 108-ஆலும், உயிரிழப்புகள் 110-ஆலும் அதிகரித்துள்ளன.
ஓட்டுநர்களின் கவனக்குறைவு, அதிவேகம், வீதிக் குறைபாடுகள் மற்றும் வாகனப் பராமரிப்பின்மை ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பாதசாரிகளுமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
