தேசிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் Ceylon Tea Village தேசிய வேலைத்திட்டம் இன்று (15) 12 மாவட்டங்களில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 500 தேயிலை கிராமங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், 2030ஆம் ஆண்டுக்குள் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாகவும், ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், உற்பத்தித் திறனை அதிகரித்தல், பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் தேயிலைத் துறையை சுற்றுலாத்துறையுடன் இணைத்தல் உள்ளிட்ட பல நோக்கங்களுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
