மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகும் முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதியிடமிருந்து இதுவரை பதில் அல்லது ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகப் பணியாற்றிய சரத் அபயகோன், பல கல்வி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை வகித்த பின்னர் மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
