நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (13.04.2026) மாலை 4:00 மணி முதல் நாளை (14.04.2026) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும். அதன்படி,
கண்டி மாவட்டம் : யட்டிநுவர
கேகாலை மாவட்டம் : வரகாபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை
நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
