அநுராதபுரம் மாவட்டத்தின் கவரக்குளம் பகுதியில் பொல்லால் தாக்கி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆறு பேரையும், எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அநுராதபுரம் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (20) சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள், கவரக்குளம் ஹல்மில்லவெவ – குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி மாலை கவரக்குளம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில், ஹல்மில்லவெவ குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கவரக்குளம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
