நானுஓயா கிளரண்டன் தோட்டத்தில் லொறி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து தொடர் குடியிருப்பின் மீது வீழ்ந்து நேற்று சனிக்கிழமை (25) விபத்திற்குள்ளாகியுள்ளது.
நானுஓயா கிளரண்டன் பகுதியில் இருந்து நானுஓயா ரதல்ல வழியாக கிடிமிட்டி பகுதியை நோக்கி பயணித்த லொறியின் பிரேக் கட்டமைப்பு செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தினால் தொடர் குடியிருப்பின் ஒரு வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் லொறியின் முன் பக்கத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர் இருந்துள்ளனர், எனினும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அம்மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
