Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் எரியூட்டி அழிக்கப்பட்டது!

Police Narcotics Control Division | Narcotics | Destroyed | Sri Lanka | Quick Tamil News

சித்திரை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று எரியூட்டப்பட்டது.

இன்று திங்கட்கிழமை (27) காலை 9 மணியளவில், புத்தளம் வனாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள ‘லெக்டோவத்தை’ எரியூட்டும் உலையில் வைத்து குறித்த போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.

பலப்பிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய நீதிமன்றங்களில் விசாரணைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடைய பெருமளவான போதைப்பொருள் தொகையே இவ்வாறு அழிக்கப்பட்டன.

அந்த வகையில், ஹெரோயின் 22 கிலோ கிராம் 888 கிராம், கேரளா கஞ்சா 33 கிலோ கிராம் 172 கிராம், கஞ்சா 247 கிலோ கிராம் 940 கிராம் போதைப்பொருட்கள் எரியூட்டும் உலையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

இன்று அதிகாலை 05.00 மணிக்கு, பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்தும், காலை 07.30 மணியளவில், சிலாபம் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து மீதமுள்ள போதைப்பொருள் தொகுதிகளும் எரியூட்டும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் சந்தன ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்த அழிப்பு நடவடிக்கையின் போது பிரசன்னமாகியிருந்தனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டு 14 வருடங்கள் – ரோஹன ஹெட்டியாராச்சி!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மருதானை – ஹிக்கடுவ கடுகதி ரயில் தடம் புரண்டு விபத்து!

வைகாசி 24, 2026
இலங்கை

அதிக விலைக்கு அரிசி ,குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

சித்திரை 27, 2026
இலங்கைவானிலை

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube