நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள கல்முனை, களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கல்மடம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.
நீதி அமைச்சின் கூற்றுப்படி, இந்த விஜயத்தின்போது, முறைப்பாடுகளை சமர்ப்பித்த குடியிருப்பாளர்களை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சந்தித்தார்.
பாரிய புதைகுழி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
இந்த விஜயத்தின்போது, காணாமற்போனோர் பற்றிய காரியாலயம் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.
