உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் , இந்திராபுரம் பகுதியில் உள்ள கவுர் கிரீன் குடியிருப்பில் இன்று தீபரவல் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பின் 9 ஆவது மாடியில் ஏற்பட்ட தீயானது 13 வது மாடிவரை பரவியுள்ளது.
இந்த குடியிருப்பில் வசித்தவர்களை உடனடியாக வெளியேற்றியதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஏசி கம்ப்ரஸர் வெடித்ததனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
