ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ரியான் பராக் ஓய்வறையில் புகைபிடித்த வீடியோ வெளியான நிலையில் IPL நிர்வாகம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது!
ஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.
இந்த போட்டியின் போது ஓய்வறையில் இருந்த ரியான் பராக் சக வீரரான துருவ் ஜுரேல் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசியபடி புகைபிடித்த காட்சி நேரலையில் வெளியானது.
ஐபிஎல் விதிகளின்படி ஓய்வறை, விளையாட்டு திடல் பகுதிகளில் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியான் பராக்கிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாக விதிப்பதாக ஐபி எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
