சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) வெள்ளிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் பல்வேறு இடங்களில் தங்களது மேதினக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன.
அதன்படி, பல முக்கிய கட்சிகள் தங்களது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தனித்தனியான கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, வடக்கு மற்றும் கிழக்கு என இரண்டு இடங்களில் மேதினக் கூட்டங்களை நடத்துகிறது.
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி – மாங்குளம் பஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் 3.00 மணி குறித்த மேதினக் கூட்டடம் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – பட்டிப்பளை வைரவர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்த்தேசியப் பேரவை தனது மேதினக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துகிறது. யாழ். நல்லூர் – இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று பிற்பகல் 3.00 மணி இடம்பெறவுள்ளது.
ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தனது கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இணுவில் – ஜொலி ஹோட்டலில் பிற்பகல் 4.00 மணிக்கு மேதினக்கூட்டம் நடைபெறவுள்ளது.
