ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் இந்த நாட்டை ஒரு அங்குலமேனும் இனி முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனப் பலங்கொடைகஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உடனடியாகத் தனது பதவியைத் துறந்து வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும், தவறினால் மக்களுடன் இணைந்து அவரைத் தம்புத்தேகமவிற்கு விரட்டியடிக்க நேரிடும் என்றும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை நிர்வகிக்கும் திறன் இல்லை எனச் சுட்டிக்காட்டினார். “பலங்கொட கஸ்ஸப மக்களுடன் வந்து தம்புத்தேகம நபரை விரட்டினார் என்று பின்னர் கூற வேண்டாம்” எனத் தெரிவித்த தேரர், ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு மக்களைத் திரட்டத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
